Thursday 23 February 2017

பாத்திமா கல்லூரி சிறுகதை, கவிதை - பயிற்சிப் பட்டறை

படைப்பாக்கத் திறன்
பாத்திமா கல்லூரி, தமிழ் உயராய்வு மையம் 14. 02. 2017 அன்று சிறுகதை, கவிதை -  பயிற்சிப் பட்டறை   நிகழ்த்தியது. மதுரை, அகில இந்திய வானொலி நிலையம், நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு ஞான சம்பந்தன் என்கிற பூரணக்குமார் சிறப்புரையாற்றி மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்தார்.


Wednesday 22 February 2017




பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மதுரை
வீரமாமுனிவா் & இதழியல்  கருத்தரங்கம்
            மேலைநாட்டிலிருந்து தமிழகம் வந்து சமயமும் தமிழும் வளா்த்த வீரமாமுனிவரின் விழாவானது  பாத்திமா கல்லூரியில்  22.02.2017 அன்று நடைபெற்றது. விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த வீரமாமுனிவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து விழா தொடங்கியது.
            சான்ஜோஸ் அரங்கில் விளக்கேற்றி இறை வணக்கத்துடன் தொடா்ந்த விழாவில் உதவிப் பேராசிரியா் முனைவா் இரா. டயானா கிறிஸ்டி வரவேற்புரை வழங்கினார். பாத்திமா கல்லூரி முதல்வர் முனைவர் அருள்சகோதரி பாத்திமாமேரி வாழ்த்துரை வழங்கினார். தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி கிறித்துவ ஆய்வு மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர்  முனைவா் அருள்தந்தை சி. மணி வளன் சே.ச அவர்கள்,  ”வீரமாமுனிவரின் உரைநடைத்திறன்” குறித்து சிறப்புரையாற்றினார். தமிழ் உரைநடையின் வளர்ச்சி, அதன் போக்கு, வீரமாமுனிவரின் பங்கு முதலியவற்றை அவர்தம் உரைநடை நூல்கள் வழி விரிவாக விளக்கினார்.  வீரமாமுனிவரின் தமிழ்ப்பணியைப் புரிந்து கொள்ள அவரது உரை வித்திட்டது.
            உதவிப் பேராசிரியர் முனைவர் ச.அருள்மைக்கேல்செல்வி, ”தேம்பாவணி காட்டும் மாண்பு”  என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.பொன்னி, ”சதுரகராதி பதிப்பும் நூற்சிறப்பும்” என்ற தலைப்பிலும் கட்டுரைகள் வழங்கினர். மாணவிகள் பங்கேற்ற தேம்பாவணி மனனப்போட்டி நடைபெற்றது. பாத்திமா கல்லூரி நாடகக் குழுவினர் தேம்பாவணியிலுள்ள இலக்கியக் காட்சியை மையமாகக் கொண்டு நாடகம் நிகழ்த்தினர். உதவிப் பேராசிரியா் திருமதி ஆ. மெர்சி ஏஞ்சலா தொகுத்து வழங்க, முதுகலை இரண்டாமாண்டு தமிழ் மாணவி அருள்சகோதரி சகாயமேரி நன்றி கூறினார்.
இதழியல் கருத்தரங்கம்
            பாத்திமாக் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக 22.02.2017 அன்று மதியம் இரண்டு மணியளவில் இதழியல் கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தின் உதவி இயக்குநர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்  ”ஊடகத் தமிழ்” என்ற தலைப்பில் உரையாற்றினார். உதவிப் பேராசிரியா் முனைவர் ஆ. தேவ்மாலா வரவேற்புரையாற்ற, உதவிப் பேராசிரியா் திருமதி ஆ. மெர்சி ஏஞ்சலா தொகுத்து வழங்கினார்.  கருத்தரங்கை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவியருக்கு கல்லூரி செயலர் முனைவர் அருள்சகோதரி பிரான்சிஸ்கா ப்ளோரா அவர்கள் பரிசு வழங்கினார். கல்லூரிகளுக்கு இடையே நடந்த கட்டுரைப் போட்டியில் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு பயிலும் செல்வி வ. கனக சுந்தரவள்ளி முதல் பரிசும் மதுரை மங்கையர்க்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இளங்கலை  இரண்டாமாண்டு பயிலும் செல்வி ஜெ. சுந்தரலெட்சுமி இரண்டாம் பரிசும் பெற்றனர். இளங்கலை மூன்றாமாண்டு தமிழ் மாணவி க. சோபிதா நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.