Thursday 31 March 2016

நினைவலைகள்

மதுரை பாத்திமா கல்லூரியில்  தமிழ் உயராய்வு மையம் சார்பில் இணைப் பேராசிரியர் முனைவர் வ. வள்ளியம்மாள் அவர்களுக்கு 30.03.2016 அன்று பணி நிறைவு விழா நடைபெற்றது.  பொன் விழா அரங்கில்  இனிதே நடந்த இவ்விழாவில்  கல்லூரி முதல்வர், செயலர், துறைத்தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேராசியர்கள் மற்றும் மாணவர்களின் அனுபவப் பகிர்வுகள்,  கலை நிகழ்வுகள் , ஒலி-ஒளிப் படக்காட்சி (முனைவர் வள்ளியம்மாளின் கடந்த கால நிகழ்வுகள் குறித்தவை) ஆகியன நடைபெற்றன.




Tuesday 8 March 2016

தமிழ்த்துறைப் படைப்பாக்கத்திறன்

மதுரை பாத்திமா கல்லூரி, தமிழ்த்துறை,  8.03.2016 அன்று சான்றிதழ் வகுப்பின் சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினராக திரு. எஸ்.சி. சேகரன்( நாடக இயக்குநர்)அவர்கள் கலந்து கொண்டு  “ நாடகம் – சமகாலத் தேவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.